வெயில் அதிகமாக அடிப்பதால் மூளை ஆவியாகி பேசுகிறார் - முத்தூரில் அண்ணாமலைக்கு பொள்ளாச்சி ஜெயராமன் பதிலடி

எடப்பாடியார் ரோட் ஷோ வந்தால் லட்சம் பேர் வருவார்கள். வெயில் அடிப்பதால் மூளை ஆவியாகி அண்ணாமலை பேசுகிறார் என எடப்பாடி பழனிச்சாமி குறித்த விமர்சனத்திற்கு பொள்ளாச்சி ஜெயராமன் பதிலடி கொடுத்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முத்தூர் வேலம்பாளையம் ஊராட்சி ராமமூர்த்தி நகரில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. வேலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட அம்மா இணை செயலாளருமான A.S.ராமலிங்கம் முருகவேல் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்பி.சிவசாமி, நமது அம்மா நாளிதழ் தலைமை ஆசிரியர் கல்யாணசுந்தரம், காங்கேயம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்என்.எஸ்.என்.நடராஜ், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், நகர செயலாளர் டீலக்ஸ் மணி, வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வெங்கடேச சுதர்ஷன் , மாவட்ட அம்மா இணை செயலாளர் ராமலிங்கம், முத்தூர் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஏழு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதே பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திமுக மற்றும் பாஜக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில்இணைந்தனர். அவர்கள்களுக்கு அதிமுக கழக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.



இந்த பரப்புரை கூட்டத்தில்வாக்கு சேகரித்த ஆற்றல் அசோக்குமார் ஐந்து ஆண்டுகள் வேலைக்காரனாக இருக்க தயாராக உள்ளேன். தேர்தலின் போது மட்டும் கொடுக்கின்ற ரூ.500 ரூ.1000 பணத்தை நம்பி வாக்களிக்காதீர்கள் என்றார். செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி ரோடு ஷோ செல்ல முடியுமா என விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், எடப்பாடியார் நடந்தால் பேரணி நின்றால் மாநாடு என்றும் ஜூன் 4க்கு பிறகு அண்ணாமலையிடம் கேளுங்கள் என தெரிவித்த அவர், அண்ணாமலையின் வெற்றியேதீர்மானிக்கப்படவில்லை எனவும், வெயில் அதிகமாக அடிப்பதால் அவரது மூளை ஆவியாகி பேசி வருகிறார் என பொள்ளாச்சிஜெயராமன் விமர்சித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...