விருகல்பட்டி கூட்டுறவு வங்கியில் முறைகேடு – நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கபோவதாக விவசாயிகள் அறிவிப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விருகல்பட்டி ஊராட்சியில் கருப்பு கொடி ஏற்றி, தேர்தலை புறக்கணிக்க போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விருகல்பட்டி ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட தலைவர், இயக்குனர்கள், செயலர் உதவி செயலாளர் ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருகல்பட்டி மற்றும் ராமச்சந்திராபுரம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடக்க வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டம், ஆடு மாடுகளுடன் போராட்டம், சாலை மறியல் என பல்வேறு கட்ட போராட்டங்கள் செய்தும் தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கப்படவில்லை.



இதனால் தமிழக அரசை கண்டித்தும், மறு பயிர் கடன் வழங்காத்தை கண்டித்தும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விருகல்பட்டி ஊராட்சியில் கருப்பு கொடி ஏற்றினர். பின்னர் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர். அப்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் இடப்பட்டன.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...