வால்பாறை அருகே தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆறுதல்

எஸ்டேட் நிர்வாகத்திடம் தீ பற்றி எறிந்த வீட்டு உரிமையாளர்களுக்கு மாற்று வீடு தர வேண்டும், அவர்களுக்கு நிவாரணம் தரவேண்டும் என்று எஸ்டேட் நிர்வாகத்திடம் சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி வலியுறுத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பாக நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்களின் ஐந்து வீடுகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.



இதில் வீட்டிலிருந்த டிவி, பீரோ கட்டில், துணிமணிகள் பணம், நகை மற்றும் சர்டிபிகேட் மற்றும் உணவுப் பொருள்கள், பாத்திரங்கள் அனைத்தும் தீயில் கருகி சேதம் அடைந்தன. தீ பிடித்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டதால் உயிர் சேதம் இன்றி தப்பினர். இது தொடர்பாக வால்பாறையில் உள்ள பல்வேறு தரப்பினர் அவர்களுக்கு உதவி செய்தனர்.

இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேற்று அப்பகுதிக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.



மேலும் இதுபோன்று தீ விபத்துகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இதுகுறித்து எஸ்டேட் நிர்வாகத்திடம் சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி எஸ்டேட் நிர்வாகத்திடம் தீ பற்றி எறிந்த வீட்டு உரிமையாளர்களுக்கு மாற்று வீடு தர வேண்டும், அவர்களுக்கு நிவாரணம் தரவேண்டும், இது போன்று விபத்துகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நகர செயலாளர் மயில் கணேசன் மற்றும் தோட்ட தொழிலாளர் பிரிவு தலைவர் வீ அமீது மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...