வெள்ளகோவிலில் பிஜேபி நிர்வாகி வீட்டில் வருமான‌ வரித்துறை சோதனை - ரூ.31 லட்சம் பணம் பறிமுதல்

கோயில் கட்டுவதற்காக சேர்த்து வைத்திருந்த ரூ.28 லட்சம் பணத்தையும், சொந்த செலவிற்காக வைத்திருந்த ரூ.3.5 லட்சம் பணத்தையும் வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக பிஜேபி நிர்வாகி ஜவஹர் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் தீத்தாம்பாளையம், பரப்புமேடு பகுதியை சேர்ந்த பிஜேபி கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டுப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜவஹர் என்பவரது வீட்டில் உரிய ஆவணங்களின்றி ரூ.31 லட்சத்து 74 ஆயிரத்து 200 ரொக்கப் பணம் வைத்திருப்பதாக திருப்பூர் மாவட்ட வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.‌

அதன் அடிப்படையில் வெள்ளகோவிலுள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும் வீடு முழுக்க உள்ள அலமாரி, உள்பக்க அறைகள் மற்றும் வீட்டை சுற்றி தேடியதில் வீட்டின் உள்பக்க அறையில்சுமார் ரூ.31 லட்சத்து 74 ஆயிரத்து 200 ரொக்கப் பணம் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட ரொக்கப் பணம் ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமான பணம்‌ என்பதும், அசோக்குமார், ஜவஹர்குமாரின் நண்பர் என்பதால் வெள்ளகோவில் பகுதிகளில் கோவில் திருப்பணிகள் செய்வதற்கு இந்த பணத்தை கொடுத்து வைத்திருந்ததாகவும் ஜவஹர் தெரிவித்தார்.



மேலும் இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணமா என்ற சந்தேகத்துடன் போலிசார் அடுத்த கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தை திருப்பூர் மாவட்ட வருமான வரித்துறைத்தினர் காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் வட்டாச்சியர் மயில்சாமி ஆகியோர் முன்னிலை எண்ணப்பட்டு‌ வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜவஹர் தரப்பில் தெரிவித்ததாவது, எனது வீட்டில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் வீட்டிலிருந்து இரண்டு வருட காலமாக எங்கள் பகுதியில் கோயில் கட்டுவதற்காக சேர்த்து வைத்திருந்த சுமார் 28 லட்சம் ரொக்க பணத்தையும், எனது சொந்த செலவிற்காக வைத்திருந்த சுமார் 3.5 லட்சம் ரொக்க பணத்தையும் முறையற்ற பணம் என கருதி எனது வீட்டிலிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த தொகை கடந்த இரண்டு வருட காலமாக கோயில் கட்டுவதற்காக சேர்த்து வைத்திருந்த பணம் எனவும், மேலும் இந்த பணத்திற்கும் வருகின்ற தேர்தலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என எழுத்துப்பூர்வமான கடிதத்தை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...