அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் சாலை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேற்று (13.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் உதவி ஆட்சியர் பயிற்சி ஆசிக் அலி, மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி ஆணையர்கள் ஸ்ரீதேவி(வடக்கு), சந்தியா(மேற்கு), காவல் துறை உதவி ஆணையர் நவீன்குமார், உதவி இயக்குநர் (நிலஅளவை) சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் எழில், மோகனகிருஷ்ணன், சிவசங்கர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

உடன் உதவி ஆட்சியர் பயிற்சி ஆசிக் அலி, மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி ஆணையர்கள் ஸ்ரீதேவி(வடக்கு), சந்தியா(மேற்கு), காவல் துறை உதவி ஆணையர் நவீன்குமார், உதவி இயக்குநர் (நிலஅளவை) சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் எழில், மோகனகிருஷ்ணன், சிவசங்கர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.