கோவையில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி

100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி எம்.கே அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு வாகன பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


கோவை: தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கோவை பாராளுமன்ற தொகுதியில் 100% ஓட்டுப்பதிவு நிகழ வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவையில் உள்ள பிரபல தொழில் குழுமமான எம்.எம்.கே குழுமத்தின் கீழ் செயல்படும் எம்.கே அறக்கட்டளை சார்பில் 'வாக்காளர் விழிப்புணர்வு வாகன பேரணி' இன்று (14.04.2024) நடைபெற்றது.



இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் செல்வசுரபி கலந்து கொண்டு எம்.கே குழுமத்தின் தலைவர் M.V. மணிகண்டன் முன்னிலையில் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பேரணியில் 250 வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுடன் பங்கேற்றவர்கள் என மொத்தம் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, அவிநாசி சாலையில் அமைந்துள்ள LIC அலுவலகம் வழியே சென்று, Huzur ரோடு, ரேஸ் கோர்ஸ் வரை சென்று அங்கிருந்து மீண்டும் அதே வழியில் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு திரும்பினர்.



இந்த விழிப்புணர்வு நிகழ்வு குறித்து எம்.கே. குழுமத்தின் தலைவர் மணிகண்டன் கூறியதாவது, கோவையில் இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் 70 சதவீகிதம், அல்லது 75 சதவிகித வாக்கு பதிவு மட்டுமே பதிவாகின்றது. மீதமுள்ள 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் பேர் ஏன் வாக்களிக்க வரவில்லை என்பதை ஆராய்ந்து, அவர்களுக்கு தேர்தல் நேரத்தில் உதவிபுரிய மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து வாகன வசதிகளை இந்த ஆண்டு நமது அறக்கட்டளை சார்பாக ஏற்படுத்தி உள்ளதாகவும், ஆயினும் வாக்குகளிப்பதன் அவசியத்தை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று இந்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியாக கூறினார். முன்னதாக அனைவரும் வாக்களிப்போம் என மனித சங்கிலியாக நின்று உறுதி மொழி எடுத்து கொண்டனர். கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...