கோவை, பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்டவர்கள் உப்பிலிபாளையம் காவலர் சமுதாயக்கூடத்திலும், மற்ற தொகுதிகளுக்குட்பட்டவர்கள் அதற்கு எதிரேயுள்ள சிஎஸ்ஐ பள்ளியிலும் வாக்களிக்க மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை: வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை ஒட்டி கோவையில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தும் நிகழ்வு இன்று, நாளை என இரு நாட்கள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கோவை, பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்டவர்கள் கோவை உப்பிலிபாளையம் காவலர் சமுதாயக்கூடத்திலும், மற்ற தொகுதிகளுக்குட்பட்டவர்கள் அதற்கு எதிரேயுள்ள சிஎஸ்ஐ பள்ளியிலும் வாக்களிக்க மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் இன்று (ஏப்ரல்.14) நேரில் வந்து அஞ்சல் வாக்கு செலுத்தி விட்டு செல்கின்றனர்.இந்த நிலையில் உப்பிலிபாளையம் சமுதாயக்கூடத்தில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தனது வாக்கை இன்று செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் இன்று (ஏப்ரல்.14) நேரில் வந்து அஞ்சல் வாக்கு செலுத்தி விட்டு செல்கின்றனர்.இந்த நிலையில் உப்பிலிபாளையம் சமுதாயக்கூடத்தில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தனது வாக்கை இன்று செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.