கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரியாக கடந்த 01.04.2016 முதல் 31.03.2017 வரை மொத்தம் ரூ.130.53 கோடி (94 சதவிகிதம்) வசூல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் இதுகுறித்து தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரியாக கடந்த 01.04.2016 முதல் 31.03.2017 வரை மொத்தம் ரூ.130.53 கோடி (94 சதவிகிதம்) வசூல் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மண்டலத்தில் ரூ.28.00 கோடியும் (94 சதவிகிதம்), மேற்கு மண்டலத்தில் ரூ.24.06 கோடியும் (95 சதவிகிதம்), தெற்கு மண்டலத்தில் ரூ.15.21 கோடியும் (89 சதவிகிதம்), வடக்கு மண்டலத்தில் ரூ.24.92 கோடியும் (93 சதவிகிதம்), மத்திய மண்டலத்தில் ரூ.38.32 கோடியும் (95 சதவிகிதம்), சொத்து வரியாக ஆகமொத்தம் ரூ.130.53 கோடி (94 சதவிகிதம்) வசூல் செய்யப்பட்டுள்ளது.”
இவ்வாறு கோவை மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.