அடிப்படை வசதிகள் செய்துகொடுக்காத காரணத்தால் கோவை மலுமிச்சம்பட்டி 6-வது வார்டு பகுதியில் 100 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வரும் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை மலுமிச்சம்பட்டி 6வது வார்டு பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற பல்வேறு வகையான அடிப்படை வசதிகள் இல்லை. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல்.15) அடிப்படை வசதிகள் எதுவும் பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் கோவை மலுமிச்சம்பட்டி 6-வது வார்டு பகுதியில் 100 குடும்பங்களை சேர்ந்த மக்கள் 2024 நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றும், வாக்களிக்க மறுக்கிறோம் என்றும் பதாகை வைத்து உள்ளனர்.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல்.15) அடிப்படை வசதிகள் எதுவும் பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் கோவை மலுமிச்சம்பட்டி 6-வது வார்டு பகுதியில் 100 குடும்பங்களை சேர்ந்த மக்கள் 2024 நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றும், வாக்களிக்க மறுக்கிறோம் என்றும் பதாகை வைத்து உள்ளனர்.