கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளில் உள்ள பொது மக்கள் புதிய கட்டிடங்கள் கட்டும்போதும், கூடுதலாக அறைகள் கட்டும்போதும், புதிதாக மேற்கூறைகள் அமைக்கும் போதும் மற்றும் மாநகராட்சி மூலம் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் மராமத்துப் பணிகள் செய்யும் பொழுது மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளில் உள்ள பொது மக்கள் புதிய கட்டிடங்கள் கட்டும்போதும், கூடுதலாக அறைகள் கட்டும்போதும், புதிதாக மேற்கூறைகள் அமைக்கும் போதும் மற்றும் மாநரகாட்சி மூலம் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் மராமத்துப் பணிகள் செய்யும் பொழுது மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும்.
மேலும், மாநகராட்சிப் பொறியாளர்களுக்கும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டும்போதும், கூடுதலாக அறைகள் கட்டும்போதும், புதிதாக மேற்கூறைகள் அமைக்கும் போதும் மற்றும் மாநரகாட்சி மூலம் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் மராமத்துப் பணிகள் செய்யும் பொழுது மதிப்பீடுகள் தயாரிக்கும் பொழுது மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைப்பதற்கான தொகையினையும் மேற்படி மதிப்பீட்டில் சேர்த்து தயாரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சிப் பொறியாளர்களும் தங்கள் வார்டு பகுதிகளிலுள்ள அனைத்து மாநகராட்சிக் கட்டிடங்களையும் ஆய்வு செய்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பில்லாத மாநகராட்சி கட்டிடங்களுக்கு அதனை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.