அனைத்து வார்டுகளில் உள்ள கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு !


கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளில் உள்ள பொது மக்கள் புதிய கட்டிடங்கள் கட்டும்போதும், கூடுதலாக அறைகள் கட்டும்போதும், புதிதாக மேற்கூறைகள் அமைக்கும் போதும் மற்றும்  மாநகராட்சி மூலம் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் மராமத்துப் பணிகள் செய்யும் பொழுது மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளில் உள்ள பொது மக்கள் புதிய கட்டிடங்கள் கட்டும்போதும், கூடுதலாக அறைகள் கட்டும்போதும், புதிதாக மேற்கூறைகள் அமைக்கும் போதும் மற்றும் மாநரகாட்சி மூலம் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் மராமத்துப் பணிகள் செய்யும் பொழுது மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும்.

மேலும், மாநகராட்சிப் பொறியாளர்களுக்கும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டும்போதும், கூடுதலாக அறைகள் கட்டும்போதும், புதிதாக மேற்கூறைகள் அமைக்கும் போதும் மற்றும் மாநரகாட்சி மூலம் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் மராமத்துப் பணிகள் செய்யும் பொழுது மதிப்பீடுகள் தயாரிக்கும் பொழுது மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைப்பதற்கான தொகையினையும் மேற்படி மதிப்பீட்டில் சேர்த்து தயாரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சிப் பொறியாளர்களும் தங்கள் வார்டு பகுதிகளிலுள்ள அனைத்து மாநகராட்சிக் கட்டிடங்களையும் ஆய்வு செய்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பில்லாத மாநகராட்சி கட்டிடங்களுக்கு அதனை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...