கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம், குஞ்சூர்பதி வனக்குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள கசிவுநீர்குட்டையில் இன்று அதிகாலை 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று கால் வழுக்கி விழுந்ததில் எழ முடியாமல் உள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று யானையை நிற்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, அந்த பெண் யானையின் அருகில் ஒரு குட்டி யானையும், சற்று பெரிய யானை உள்ளதாலும், குட்டி யானை தொடர்ந்து கீழே விழுந்த யானையிடம் பால் குடிக்க வருவதாலும் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அடிப்பட்ட யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதில் சிரமம் நிலவிவருகிறது.
தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அப்பகுதியிலேயே முகாமிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று யானையை நிற்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, அந்த பெண் யானையின் அருகில் ஒரு குட்டி யானையும், சற்று பெரிய யானை உள்ளதாலும், குட்டி யானை தொடர்ந்து கீழே விழுந்த யானையிடம் பால் குடிக்க வருவதாலும் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அடிப்பட்ட யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதில் சிரமம் நிலவிவருகிறது.
தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அப்பகுதியிலேயே முகாமிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.