ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் மூலம் 9,54,426 குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறுவார்கள் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பிசப் உபகாரம் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கி பேசினார்.



அப்போது அவர் பேசுகையில், கோவை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக, நிதிநிலை அறிக்கையில், 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 



தமிழகத்தில் சுமார் 1 கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக செயல்படும் 34,840 நியாய விலைக் கடைகள் மூலமாகவும், அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 1250 நியாயவிலைக் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் 54 நியாயவிலைக் கடைகள், மகளிர் சுயஉதவிக்குழு நடத்தும் 108 நியாயவிலைக் கடைகள் மூலம் என மொத்தம் 1412 கடைகளில் 9,54,426 குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறும் வகையில் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி துவக்கப்பட்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு, செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பப்படும். தகவல் பெறப்பட்ட பின்னர், ரேசன் கடைகளுக்கு நேரில் சென்று, மின்னணு குடும்ப அட்டைகளை அனைவரும் பெற்றுக் கொள்ளலாம் என எஸ்.பி.வேலுமணி பேசினார்.



இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி,  கோவை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தலைவர் கருப்பசாமி, அர்ச்சுன கூட்டுறவு சங்கத்தலைவர் டி.எ.பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...