தேர்தல் விழிப்புணர்வு குறித்து கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குறுந்தகடு வெளியீடு

எங்கெங்கெல்லாம் 60 சதவீதத்திற்கும் கீழ் வாக்குப்பதிவானதோ, அங்கு அழைப்புதல் தருவது, உறுதிமொழி எடுக்க வைப்பது போன்ற முன்னெடுப்புகளும் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு குறித்து தொகுக்கப்பட்ட குறும்படங்கள் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.



இதனை கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடி வெளியிட்டார். மாவட்ட ஆட்சியர் வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பெற்று கொண்டனர்.



இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எங்கெங்கெல்லாம் 60% க்கும் கீழ் வாக்குப்பதிவானதோ, அங்கு அழைப்புதல் தருவது, உறுதிமொழி எடுக்க வைப்பது போன்ற முன்னெடுப்புகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.



கோவை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு ஆவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் ஒரு சாமியானா, வீல் சேர், போன்ற குறிப்பிட்ட வசதிகள் இருப்பதற்கு அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...