கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.15.86 கோடி மதிப்பிலான 2.45 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியிலுள்ள பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் கண்டறிந்து, விரைவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மாநகராட்சியிலுள்ள நான்கு மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு, மற்றும் மத்திய மண்டலம் ஆகிய வார்டு பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.15.86 கோடி மதிப்பிலான 2.45 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலம், வடவள்ளி, வார்டு-17, குகன் கார்டனில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.5.4 கோடி மதிப்பிலான 90 சென்ட் அளவிலான இடங்களும், வடக்கு மண்டலம், கிருஷ்ணராயபுரம் கிராமம், வார்டு-40, பி.பி.சி காலனியில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.5.5 கோடி மதிப்பிலான 55 சென்ட் அளவிலான இடங்களும், கிழக்கு மண்டலம், காளப்பட்டி, வார்டு-35, காமராஜ் நகரில் சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 19 சென்ட் அளவிலான இடங்களும், மத்திய மண்டலம், ராமநாதபுரம், வார்டு-74, ருக்மணி கார்டனில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.07 கோடி மதிப்பிலான 68 சென்ட் மற்றும் அதே பகுதியில் சுமார் ரூ.0.39 கோடி மதிப்பிலான 13 சென்ட் அளவிலான இடங்களும் என மொத்தம் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.15.86 கோடி மதிப்பிலான 2.45 ஏக்கர் அளவிலான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.