விநாயகர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கம்பம் மேலதாளங்கள் முழங்க வானவேடிக்கை உடன் உடுமலை - பொள்ளாச்சி சாலை வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் முதல் நிகழ்வாக பூச்சொரிதலும் அதைத் தொடர்ந்து நோன்பு சாட்டுதலும் நடைபெற்றது. 2-வது நிகழ்வாக கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கம்பம் மேலதாளங்கள், வானவேடிக்கை முழங்க உடுமலை- பொள்ளாச்சி சாலை வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

அதைத் தொடர்ந்து கம்பம் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பீடத்தில் போடப்பட்டது. பின்னர் பூவோடு கோவிலை மூன்று முறை வலம் வந்து கம்பத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து கம்பத்திற்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவிலில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்வையொட்டி உடுமலை போலீசார் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கம்பம் மேலதாளங்கள், வானவேடிக்கை முழங்க உடுமலை- பொள்ளாச்சி சாலை வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
அதைத் தொடர்ந்து கம்பம் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பீடத்தில் போடப்பட்டது. பின்னர் பூவோடு கோவிலை மூன்று முறை வலம் வந்து கம்பத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து கம்பத்திற்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவிலில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்வையொட்டி உடுமலை போலீசார் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.