உடுமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விநாயகர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கம்பம் மேலதாளங்கள் முழங்க வானவேடிக்கை உடன் உடுமலை - பொள்ளாச்சி சாலை வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் முதல் நிகழ்வாக பூச்சொரிதலும் அதைத் தொடர்ந்து நோன்பு சாட்டுதலும் நடைபெற்றது. 2-வது நிகழ்வாக கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கம்பம் மேலதாளங்கள், வானவேடிக்கை முழங்க உடுமலை- பொள்ளாச்சி சாலை வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.



அதைத் தொடர்ந்து கம்பம் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பீடத்தில் போடப்பட்டது. பின்னர் பூவோடு கோவிலை மூன்று முறை வலம் வந்து கம்பத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து கம்பத்திற்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவிலில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்வையொட்டி உடுமலை போலீசார் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...