திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து தாராபுரம் மூன்றாவது வார்டு பகுதியில் அமைச்சர் கயல்விழி பிரச்சாரம்

வணிகர்கள், தையல் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பு மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து திமுகவின் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி அமைச்சர் கயல்விழி வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரம் 3 ஆம் வார்டு பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வணிகர்கள், தையல் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பு மக்களை வீடு வீடாக நடந்து சென்று திமுகவின் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.



அப்போது தப்பாட்டம், ஒயிலாட்டம், நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் திமுகவின் மூன்று ஆண்டு சாதனைகளை எடுத்துக் கூறியும், பெட்ரோல் விலை, டீசல் விலை, கேஸ் விலை குறைக்கப்படும் என தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

3, ஆம் வார்டு கவுன்சிலர் ஹைடெக் அன்பழகன் பிரச்சார ஏற்பாடுகளை செய்திருந்தார். நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் ஏராளமான மூத்த திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...