இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்புராயனுக்கு ஆதரவாக திருப்பூரில் இருசக்கர வாகன பேரணி

அமைச்சர் சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் வேட்பாளர் சுப்பராயனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுப்பராயன் போட்டியிடுகிறார். வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை இன்று மாலை 6:00 மணியுடன் நிறைவடைகிறது.



தமிழக முழுவதும் இறுதி கட்ட பரப்புரை சூடு பிடித்துள்ள நிலையில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகள் 1000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பாண்டியன் நகர் பகுதியில் தொடங்கி திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளை மையப்படுத்தும் வகையிலான வாகன பேரணியில் ஈடுபட்டனர்.

இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளையும், மத்திய பாஜக தோற்கடிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஒலிபெருக்கியில் பேசியவாறு பேரணியாக வந்தனர். இந்த பேரணியில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், வேட்பாளர் சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மேயர் தினேஷ்குமார் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...