4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை வெற்றிபெற செய்யவேண்டும் – சிங்காநல்லூரில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்

கோவை மாவட்டத்தில் தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகை பெறாமல் இருப்பவர்களுக்கு அடுத்த 5 மாதத்தில் அந்த திட்டத்தின் பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில், இந்தியா கூட்டணியின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி இன்று (ஏப்ரல்.17) பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.



அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் மகளிர் இலவச பேருந்து திட்டம் மூலம் 27 கோடி பயணங்களை இம்மாவட்ட மகளிர் மேற்கொண்டு உள்ளனர் என்றார். இதனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.900 வரை சேமித்து உள்ளனர் என்றார். புதுமை பெண் திட்டம் மூலம், கோவை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று கல்லூரி கல்வி பயிலும் 14,000 மாணவிகள் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 பெறுகின்றனர். 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் தினமும் 80,000 மாணவ மாணவிகள் சத்தான உணவை உண்ணுகின்றனர் என்றார்.



மேலும் அவர் கோவை மாவட்டத்தில் தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகை பெறாமல் இருப்பவர்களுக்கு அடுத்த 5 மாதத்தில் அந்த திட்டத்தின் பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி வழங்கினார்.



கோவை தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் உதய சூரியன் சின்னம் களத்தில் இறங்கியுள்ளது. எனவே குறைந்தது 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை வெற்றிபெற செய்யவேண்டும் என கோவை மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...