4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை வெற்றிபெற செய்யவேண்டும் – சிங்காநல்லூரில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்

கோவை மாவட்டத்தில் தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகை பெறாமல் இருப்பவர்களுக்கு அடுத்த 5 மாதத்தில் அந்த திட்டத்தின் பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில், இந்தியா கூட்டணியின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி இன்று (ஏப்ரல்.17) பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.



அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் மகளிர் இலவச பேருந்து திட்டம் மூலம் 27 கோடி பயணங்களை இம்மாவட்ட மகளிர் மேற்கொண்டு உள்ளனர் என்றார். இதனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.900 வரை சேமித்து உள்ளனர் என்றார். புதுமை பெண் திட்டம் மூலம், கோவை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று கல்லூரி கல்வி பயிலும் 14,000 மாணவிகள் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 பெறுகின்றனர். 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் தினமும் 80,000 மாணவ மாணவிகள் சத்தான உணவை உண்ணுகின்றனர் என்றார்.



மேலும் அவர் கோவை மாவட்டத்தில் தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகை பெறாமல் இருப்பவர்களுக்கு அடுத்த 5 மாதத்தில் அந்த திட்டத்தின் பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி வழங்கினார்.



கோவை தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் உதய சூரியன் சின்னம் களத்தில் இறங்கியுள்ளது. எனவே குறைந்தது 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை வெற்றிபெற செய்யவேண்டும் என கோவை மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...