தான் இங்கு வாக்கு சேகரிக்க வரவில்லை எனவும், தங்களிடம் ஆசி பெற வந்து உள்ளதாகவும் கூறி சாஷ்டாங்கமாக காலில் விழுந்து பாஜக வேட்பாளர் அண்ணாமலை வணங்கினார்.
கோவை: கோவை, கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை அங்கு உள்ள நானா நானி முதியோர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்றார். அப்போது அவர்களுடன் பேசி அண்ணாமலை தன்னையும் அறியாமல் கண் கலங்கினார்.

அங்கு இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர். முன்னதாக மாலை அணிவித்தும் பூரண கும்ப மரியாதை வழங்கி சிறப்பான வரவேற்பு வழங்கினர். பின்னர் அங்கிருந்த முதியோர்களிடம் பேசிய அண்ணாமலை தான் இங்கு வாக்கு சேகரிக்க வரவில்லை எனவும், தங்களிடம் ஆசி பெற வந்து உள்ளேன் எனவும் கூறி சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கினார்.

அவரது தலையில் கை வைத்து அனைவரும் ஆசிர்வாதம் வழங்கி மலர்கள் தூவினர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அங்கு இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர். முன்னதாக மாலை அணிவித்தும் பூரண கும்ப மரியாதை வழங்கி சிறப்பான வரவேற்பு வழங்கினர். பின்னர் அங்கிருந்த முதியோர்களிடம் பேசிய அண்ணாமலை தான் இங்கு வாக்கு சேகரிக்க வரவில்லை எனவும், தங்களிடம் ஆசி பெற வந்து உள்ளேன் எனவும் கூறி சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கினார்.
அவரது தலையில் கை வைத்து அனைவரும் ஆசிர்வாதம் வழங்கி மலர்கள் தூவினர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.