நம் தலைவர் கை காட்டுபவரே பிரதமராக வர வேண்டும் - கோவை சிவானந்தா காலனியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

தொழில்துறைக்கு பெயர்போன கோவையின் பெருமைகளை மீட்டெடுக்க, மாநில உரிமைகள் காக்க, பாசிச பாஜகவுக்கும், அவர்களின் அடிமைகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.


கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கோவை சிவானந்தா காலனியில் இன்று (ஏப்ரல்.17) திமுக இளைஞர் அணி செயலாளர்-இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், தொழில்துறைக்கு பெயர்போன கோவையின் பெருமைகளை மீட்டெடுக்க, மாநில உரிமைகள் காக்க, பாசிச பாஜகவுக்கும், அவர்களின் அடிமைகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும். மேலும் தமிழ்நாட்டையும், தமிழர்களையும் நேசிக்கும் நம் தலைவர் கை காட்டுபவரே பிரதமராக வர வேண்டும். அதற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கோவை சிவானந்தா காலனியில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்களிடம் கூறி வாக்கு சேகரித்தார். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...