வாக்குச்சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள் பட்டியல் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி(தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை), கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வாக்குச் சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்தலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஏப்ரல்.17) தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோவையில் வரும் 19ஆம் தேதி நடைபெறும் தேர்தல் அன்று, வாக்குச் சாவடிகளில் அடையாளச் சான்றாக உபயோகப்படுத்த கூடிய ஆவணங்கள் குறித்த பட்டியலை தெரிவித்துள்ளார். அதன்படி,

1.வாக்காளர் அடையாள அட்டை

2.ஆதார் அட்டை

3.மகாத்மா காந்தி(தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை)

4.கணக்கு புத்தகங்கள் (வங்கி அஞ்சலகங்களால்

புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை)

5.மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை

(மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது)

6.ஓட்டுனர் உரிமம் (பணியாளர் அடையாள அட்டை)

7. இயலாமைக்கான தனித்துவமான அட்டை (இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது)

8.வருமான வரி (நிரந்தர கணக்கு எண் அட்டை)

9.ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது)

10.இந்திய கடவுச்சீட்டு 10 ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது)

11.அடையாள அட்டை (மத்திய/மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது)

12.அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்ற/சட்டமன்ற பேரவை/சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது) ஆகியவற்றை கொண்டு வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...