கோவை மக்களவைத் தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வாக்குச் சாவடி மையங்களுக்கு EVM Machine, VV Pad, Control Unit, Ballet Unit, Voting Compartment, முதியவர்களுக்கான நாற்காலிகள், வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் ஆகியவற்றை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.


கோவை: மக்களவைத் தேர்தலையொட்டி கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வாக்குச் சாவடி மையங்களுக்கு EVM Machine, VV Pad, Control Unit, Ballet Unit, Voting Compartment, முதியவர்களுக்கான நாற்காலிகள் உட்பட வாக்கு செலுத்தும் இயந்திரங்கள், கோவை மக்களவைத் தொகுதிக்கான வாக்குச்சாவடி மையங்களுக்கு, மண்டல அலுவலர்கள், துணை மண்டல் அலுவலர்கள், தேர்தல் அதிகாரி, காவல்துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி இன்று (ஏப்ரல்.18) நடைபெற்று வருகிறது.



அதனை வட்டாட்சியர்கள் மற்றும் துணை வட்டாட்சியர்கள் முன்னிலையில் வாகனங்களில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி ஒரு வாகனத்தில் ஒரு மண்டலத்துக்குட்பட்ட 10 முதல் 15 வாக்குச்சாவடி மையங்களுக்கு இயந்திரங்களை எடுத்துச் செல்கின்றனர்.



மேலும் வாகனங்களை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. 33 வாகனங்களில் 430க்கு மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இப்பணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், 500-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...