காங்கேயம் அருகே வீரணம்பாளையத்தில் 2 வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஓட்டுநர் பலி

நேற்று இரவு வெள்ளகோவிலில் இருந்து காங்கேயம் நோக்கி வந்த வேனும், லோடு‌ வேனும் வீரணம்பாளையத்தில் உள்ள திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் அக்கரபாளையம் பகுதியை சேர்ந்தவர் மலைச்சாமி வயது 38. இவர் லோடு வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வெள்ளகோவில் இருந்து காங்கேயம் நோக்கி வேனில் வந்து கொண்டிருந்த போது எதிரே நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி வயது 45 என்பவர் ஓட்டி வந்த லோடு‌ வேன் வீரணம் பாளையத்தில் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வேனில் வந்த ஓட்டுநர்களும் மற்றும் மலைச்சாமியுடன் கூலிவேலை செய்யும் வடமாநிலத்தை சேர்ந்த ஜெய்கிஷான் வயது 20 ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.



இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவித்த தகவலின்‌ பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கிய 3 நபர்களையும் போராடி மீட்டனர். இதில் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த வேன் ஓட்டுநர் மலைச்சாமி(38) மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.



மேலும் படுகாயம் அடைந்த சுப்பிரமணி, ஜெய்கிஷான் ஆகியோரை காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து காங்கேயம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

எனவே வாகன ஓட்டிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிப்புகள் அல்லது முன்னேற்பாடுகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்‌. மேலும் கடந்த வாரம் இதே சாலையில் அரசு பேருந்தும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...