கவுண்டம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் சக்திபீடம் ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவிலின் 28ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா

ஸ்ரீ கருமாரியம்மன் சக்தி பீடம் பீடாதிபதி சிவ ஸ்ரீ செந்தில் சுவாமிகள், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசா அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் கௌமாரபாளையம் தவத்திரு ராமானந்த குமரகுருபரர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


கோவை: கோவை, கவுண்டம்பாளையம் கிரிநகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அமைந்திருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் சக்திபீடம் ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவிலின் 28ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா நேற்று (ஏப்ரல்.17) மிக விமர்சியாக நடைப்பெற்றது.

ஸ்ரீ கருமாரியம்மன் சக்தி பீடம் பீடாதிபதி சிவ ஸ்ரீ செந்தில் சுவாமிகள், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசா அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் கௌமாரபாளையம் தவத்திரு ராமானந்த குமரகுருபரர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



இவ்விழாவானது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீ கருமாரியம்மன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா கணபதி ஹோமம், திருக்கொடியேற்றம், அவ்வை சண்முகி தெய்வீகக் குழு அம்மன் வேடமணிந்து சிறப்பு நடனம், ஸ்ரீதேவி நகர் வெற்றி விநாயகர் ஆலயத்திலிருந்து அக்னிகம்பம் எடுத்து வருதல், பூவோடு அக்னி ஏற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்குதல் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

மேலும் வருகின்ற (ஏப்ரல்.19) வெள்ளிக்கிழமை அன்று தீபாரதனை, அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்குதல் உடன் விழா இனிதே நிறைவடைய உள்ளது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...