கோவை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் தேசிய போலியோ நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று கொடுக்கப்பட்டது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயன் தொடக்கி வைத்தார்.

இது குறித்து க.விஜயகார்த்திகேயன் கூறுகையில், தேசிய போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் கோவையில் துவங்கியது. இம்முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதில் 1,60,991 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு குழந்தைகள் உள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதற்காக 33 மாநகராட்சி, நகர் நல மையங்கள், 129 சத்துணவு கூடங்கள் மற்றும் மாநகராட்சி பகுதியிலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள், 45 பள்ளிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளின் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இம்முகாம் இன்று (ஏப்ரல் 2) மற்றும் இம்மாதம் 30ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என்றார்.