திருப்பூரில் பேருந்துகளை சிறைப்பிடித்த பொதுமக்கள் – போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரம்

திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்துகளை சிறைப்பிடித்த பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல போதுமான அளவு பேருந்துகள் இயக்கவில்லை என குற்றம் சாட்டி கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பேருந்துகளை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் நடைபெற உள்ளது. 100% அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருப்பூரில் பணிபுரியும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டி கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்திற்கு படை எடுத்தனர்.

இருப்பினும் திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றம் சாட்டி, பேருந்துகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்துகளில் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மூச்சு விடுவதற்கு கூட இடமில்லாமல் இடிபாடுகளுக்குள் சிக்கி பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...