கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

நான் வாக்களித்து விட்டேன். மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இன்று (ஏப்ரல்.19) தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்நாடாளுமன்றத் தேர்தல் இந்திய திருநாட்டில் இன்று ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் இன்று நடைபெறுகிறது. ஏழாவது கட்டம் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகள் (ஜூன்.4) தேதி வெளியாக உள்ளது. நான் வாக்களித்து விட்டேன். மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் மதியம் மிகவும் வெயில் இருக்கும். எனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வெயில் வரும் முன்பே வாக்களிக்கச் செல்லுங்கள் என்று கூறினார்.

மேலும் வாக்குச்சாவடிகளில் கூட்டம் இருக்கும் என்பதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும். எனவே வாட்டர் பாட்டிலில் தண்ணீரை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...