பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 5 மணி முதல் திருச்சி செல்ல வேண்டிய பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: காங்கேயம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 5 மணி முதல் திருச்சி செல்ல வேண்டிய பேருந்துகள் வரவில்லை என பயணிகள் புகார் தெரிவித்தனர். வெகுநேரமாக பேருந்துகள் வரததால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போதிய பேருந்துகள் இடைககாத்தால், வாக்களிக்க செல்ல முடியாமல் தவிப்பதாக வெளியூர் பயணிகள் தெரிவித்தனர். மக்கள் நலமா என கேட்டு தெரிந்த முதல்வருக்கு களத்தில் இறங்கி பார்த்தால் தான் மக்கள் நிலை புரியும் என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர். காங்கேயம் பகுதியில் உள்ள உணவகங்கள் திறக்கப்படாதால் உணவுகூட கிடைக்காமல் பட்டினி கிடப்பதாக அவர்கள் உருக்கமாக கூறினர்.
போதிய பேருந்துகள் இடைககாத்தால், வாக்களிக்க செல்ல முடியாமல் தவிப்பதாக வெளியூர் பயணிகள் தெரிவித்தனர். மக்கள் நலமா என கேட்டு தெரிந்த முதல்வருக்கு களத்தில் இறங்கி பார்த்தால் தான் மக்கள் நிலை புரியும் என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர். காங்கேயம் பகுதியில் உள்ள உணவகங்கள் திறக்கப்படாதால் உணவுகூட கிடைக்காமல் பட்டினி கிடப்பதாக அவர்கள் உருக்கமாக கூறினர்.