சுங்கம் பகுதியில் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி

சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா பெண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பின்னர் ஓட்டுபோட்டுவிட்டு வந்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான ஓட்டுப்பதிவு பல்வேறு மையங்களில் இன்று (ஏப்ரல்.19) விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற திட்டத்தின் கீழ் வாக்குச்சாவடி மையங்களில் மரக்கன்றுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் வாக்கு போட்டு விட்டு வருபவர்களுக்கு இந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் கோவை சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா பெண்கள் கல்லூரிக்கு இன்று மதியம் சென்றார். பின் வாக்குச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குப்பதிவு குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மரக்கன்றுகளை ஒட்டு போட்டுவிட்டு வருபவர்களுக்கு வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...