திமுக அரசின் சாதனைகளுக்கு பெண்கள் மிக பெரிய ஆதரவு - பொள்ளாச்சியில் திமுக வேட்பாளார் ஈஸ்வரசாமி பேட்டி

திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கும், சாதனைகளுக்கும் பெண்கள் பெரும் வரவேற்பு அளித்து வருவதாகவும், பொள்ளாச்சி தொகுதியில் திமுகவின் வெற்றி பிரகாசமாக இருப்பதாகவும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி தெரிவித்தார்.


கோவை: தமிழக முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1715 வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். பொள்ளாச்சி கோட்டூர் ரோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்ற வேட்பாளர் ஈஸ்வரசாமி அங்குள்ள வாக்குசாவடி அதிகாரிகளிடமும், திமுக முகவர்களிடமும் வாக்குப்பதிவு குறித்து கேட்டறிந்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் ஈஸ்வரசாமி, காலை 6 மணி முதல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் கடந்து 3 ஆண்டுகளாக திமுக அரசு செய்த திட்டங்களுக்கும், சாதனைக்கும் பெண்கள் பெரும் வரவேற்பு அளித்து வருவதாகவும், பொள்ளாச்சி தொகுதியில் திமுகவின் வெற்றி பிரகாசமாக இருப்பதாகவும் வேட்பாளர் ஈஸ்வரசாமி தெரிவித்தார். இவருடன் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...