நமக்கான தலைவர்களை நாம் சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும் - கோவையில் விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட துணை அமைப்பாளர் பேச்சு

இன்றைய நாள் நமக்கான நாள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட துணை அமைப்பாளர் ராகுல் ராம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் வெள்ளிக்கிழமை இன்று (ஏப்ரல்.19) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் அதிகாலையிலேயே ஜனநாயக கடமையாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தினர்.



இந்நிலையில், கோவையில் விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட துணை அமைப்பாளர் ராகுல் ராம், கோவை லாலி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் இது குறித்து, விளையாட்டு மேம்பாட்டு துறை மாநகர் மாவட்ட துணை அமைப்பாளர் ராகுல் ராம் கூறுகையில், இன்றைய நாள் நமக்கான நாள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

கோவை மாவட்டம் மக்கள் தொகையிலும், சென்னைக்கு அடுத்தபடியாக தொழில் மற்றும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் விமான நிலைய விரிவாக்கம், மேம்பால பணிகள், மெட்ரோ திட்டம் என பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவதாக அனைத்து கட்சியினரும் தெரிவித்துள்ளனர். எனவே இன்றைய நாளில் நமக்கு தேவையான தலைவர்களை நாம் சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...