உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பூவோடு எடுக்கும் நிகழ்வு துவக்கம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற செவ்வாய்க்கிழமை மாலை வரை பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம்தேதி பூச்செறிதல் நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது .இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் கொடியேற்றம் விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.



இதற்கிடையில் நேற்று இரவு பூவோடு எடுக்கும் நிகழ்வு தொடங்கியது. இதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் டோக்கன் வழங்கப்பட்டது. பக்தர்கள் வரிசையில் நின்று 250 ரூபாய் செலுத்தி டோக்கன் பெற்று பூவோடு எடுத்தனர். இன்று முதல் வருகின்ற செவ்வாய்க்கிழமை மாலை வரை பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெள்ளிக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மன் கோவிலில் குவிந்தனர்.

மேலும் தேர் திருவிழாவுக்கு தினமும் கூட்டம் அதிகமாக மாரியம்மன் கோவிலுக்கு வருவதால் முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...