சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன் மக்கள் திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

நீண்ட நேரம் காத்திருந்தும் அரசு பேருந்துகள் வராததால் பயணிகள் பேருந்து நிலையத்தின் முன்பாக சிங்கநல்லூர்-வரதராஜபுரம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


கோவை: தமிழ்நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு (ஏப்ரல்.19) நடைபெற்றது. இதற்காக கோவையில் இருந்து தென் மாநிலங்களுக்கு செல்ல 200க்கும் மேற்பட்ட பேருந்து சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் (ஏப்ரல்.19) காலை கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஏராளமான பயணிகள் வருகை தந்தனர். ஆனால் போதுமான அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், நீண்ட நேரமாக பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.



தனியார் பேருந்தில் செல்லலாம் என்றால் டிக்கெட் விலையை உயர்த்தி விற்கின்றனர். மேலும் மாலை 6 மணிக்கு முன்பாக சொந்த ஊர்களுக்கு சென்றால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதால், அவர்கள் தவித்தனர். இதனிடையே நீண்ட நேரம் காத்திருந்தும் அரசு பேருந்துகள் வராததால் பயணிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்தின் முன்பாக சிங்கநல்லூர்-வரதராஜபுரம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரும், போக்குவரத்து துறை அதிகாரிகளும், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...