கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பூட்டி சீல் வைப்பு – போலீசார் பலத்த பாதுகாப்பு

அரசு பொறியியல் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று (ஏப்ரல்.20) வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் கலெக்டர் கிராந்தி குமார் பாடி முன்னிலையில் அதிகாரிகள் ஸ்ட்ராங் ரூமை பூட்டி சீல் வைத்தனர்.


கோவை: தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில், கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று (ஏப்ரல்.19) சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன், கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு கொண்டு செல்லப்பட்டன.

இதைத்தொடர்ந்து இன்று (ஏப்ரல்.20) வேட்பாளர்கள், முகவர்கள், கலெக்டர் கிராந்தி குமார் பாடி, முன்னிலையில், அதிகாரிகள் ஸ்ட்ராங் ரூமை பூட்டி சீல் வைத்தனர்.



மேலும் கல்லூரி வளாகத்தில் தமிழக காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருட்டபட்டு கட்டுப்பாட்டு அறை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...