தமிழக அரசின் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் துவங்கி நடைபெற்று வருகிறது. குன்னூர் வியாபாரிகள் பொதுநலச் சங்கத்தில் நடைபெற்ற இம்முகாமில் குன்னூா் நகராட்சி ஆணையர் சிராஜ், நகராட்சி நகா் நல மருத்துவா் ரகுநாத், வியாபாரிகள் சங்க தலைவா் பரமேஸ்வரன், செயலாளா் ரகீம், வழக்கறிஞர் சலீம் ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு இலவச சொட்டு மருந்து வழங்கினார்கள்.

இதில், குன்னூரின் பல்வேறு பகுதியில் இருந்தும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இதில், குன்னூரின் பல்வேறு பகுதியில் இருந்தும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் ஆர்வமுடன் பங்கேற்றனர்.