திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் 282 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


திருப்பூர்: தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 1745 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நேற்று காலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று இரவு அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் இடப்பட்டு வாக்கு என்னும் மையமும, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் வைப்பறையுமான திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது.



இதனை தொடர்ந்து ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி அறைகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் முன்னிலையில் வைப்பறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் 282 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோல் வைப்பறைகளுக்கு முன்னாள் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு காவல் துறை உள்ளிட்ட மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் முகவர் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட பகுதி வரை அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...