டீசல், பெட்ரோல் மீதான வாட் வரியினை குறைக்க வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் நீலகிரியில் தேயிலை தூள் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குன்னூர் தேயிலை வர்த்தக கூட்டமைப்பின் சார்பில் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் தூசி தர தேயிலை தூள் ஏலம் இந்த வாரம் நடத்தப்படவில்லை.
இந்த நிதி ஆண்டின் கடைசி நாள் என்பதால் அதிகப்படியான தேயிலை விற்பனை செய்யப்படவில்லை. மேலும், நிதிஆண்டின் இறுதி நாளான கடைசி வியாழனன்று டஸ்ட் தர தேயிலை தூள் ஏலம் நடத்த திட்டமிடப்பட்டது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக அதனை கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் ஏலம் நிறுத்தப்பட்டது என குன்னூர் தேயிலை வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் போஜராஜன் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்து வருவதால் வரும் நாட்களிலும் அதிகப்பயான தேயிலைகள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கமடையும் என கருதப்படுகிறது. கொள்முதலாளர்களுக்கு தேயிலை சென்றடையாமல் உற்பத்திக்கான தொகை கிடைக்காது. இதனால், தற்போது பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது என்றார்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் நீலகிரியில் தேயிலை தூள் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குன்னூர் தேயிலை வர்த்தக கூட்டமைப்பின் சார்பில் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் தூசி தர தேயிலை தூள் ஏலம் இந்த வாரம் நடத்தப்படவில்லை.
இந்த நிதி ஆண்டின் கடைசி நாள் என்பதால் அதிகப்படியான தேயிலை விற்பனை செய்யப்படவில்லை. மேலும், நிதிஆண்டின் இறுதி நாளான கடைசி வியாழனன்று டஸ்ட் தர தேயிலை தூள் ஏலம் நடத்த திட்டமிடப்பட்டது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக அதனை கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் ஏலம் நிறுத்தப்பட்டது என குன்னூர் தேயிலை வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் போஜராஜன் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்து வருவதால் வரும் நாட்களிலும் அதிகப்பயான தேயிலைகள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கமடையும் என கருதப்படுகிறது. கொள்முதலாளர்களுக்கு தேயிலை சென்றடையாமல் உற்பத்திக்கான தொகை கிடைக்காது. இதனால், தற்போது பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது என்றார்.