கோவை மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவுவதற்கான அச்சம் காரணமாக, தமிழக-கேரள எல்லையில் உள்ள 12 சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு இரண்டாவது நாளாக தொடர்கிறது.
கோவை: கோவை மாவட்டத்தில் கேரள மாநில பண்ணைகளில் வாத்து, கோழி போன்ற பறவைகளில் ஹெச்5 என்1 வைரஸ் பரவுவதாக தகவல் அடிப்படையில், தமிழகத்திலும் இதன் பரவல் அச்சம் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு-கேரள எல்லை பகுதிகளில் உள்ள 12 சோதனைச்சாவடிகளில் தொடர் கண்காணிப்பும், வாகனங்கள் கடந்து செல்வதற்கு முன் அவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்படும் முறையும் கடைபிடிக்கப்படுகின்றன. ஏப்ரல் 21ஆம் தேதி இரண்டாவது நாளாக இந்த கண்காணிப்பு நடைமுறையில் உள்ளது.