கூடுதல் தண்ணீர் திறக்கக்கோரி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட கால்வாய் மதகுகள் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்

கூடுதலாக இரண்டு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக் கூறி பொள்ளாச்சி அருகே குண்டலப்பட்டியில் உள்ள தொண்டாமுத்தூர் கிளை கால்வாய் மதகுகள் மேல் ஏறி நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பரம்பிகுளம் ஆழியார் பாசனத் திட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து முதலாம் மண்டல பாசனத்தில் இரண்டாவது சுற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர் கிளை கால்வாய் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது தொண்டாமுத்தூர் கிளை கால்வாய்க்கு ஐந்து நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே கூடுதலாக இரண்டு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக் கூறி இன்று பொள்ளாச்சி அருகே குண்டலப்பட்டியில் உள்ள தொண்டாமுத்தூர் கிளை கால்வாய் மதகுகள் மேல் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏறி நின்று கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் தண்ணீர் திறந்து விடக் கூறி கோஷங்களும் எழுப்பினர். தற்போது மழை இல்லாமல் வறட்சியாக இருப்பதால் தென்னை மரங்கள் காய்ந்து வருவதாகவும், தற்போது திறந்துவிடபட்ட தண்ணீர் மூலம் கடைமடை விவசாயிகள் வரை பயன் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மேலும் இரண்டு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதிகாரிகள் இதுவரை வராததாது கவலை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...