போத்தனூர் குறிச்சி அருகே போதை மாத்திரை விற்பனை செய்த நபர் கைது – 12 போதை மாத்திரைகள் பறிமுதல்

போதை மாத்திரை விற்பனை செய்த போத்தனூர் குறிச்சி பிரிவை சேர்ந்த லத்தீப்(32) என்பவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 12 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை போத்தனூர் போலீசார் நேற்று (ஏப்ரல்.21) ரோந்து பணி சென்றனர். அப்போது குறிச்சி பிரிவு அருகே சந்தேகம்படும்படி வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதைத்தொடர்ந்து அவரை சோதனை செய்தபோது, அவர் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் விசாரித்ததில், போத்தனூர் குறிச்சி பிரிவை சேர்ந்த லத்தீப்(32) என்பது தெரியவந்தது. பின் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 12 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...