கடும் வெயிலால் கோவையில் இளநீர் விலை உயர்வு - ஒரு இளநீர் ரூ.45 விற்பனை

வெயிலின் தாக்கம் அதிக அளவு இருப்பதால் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிக அளவு இளநீரை பருகி வருகின்றனர். இதன் காரணமாக இளநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது என்று வியபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: ஜில்லென்று காற்று வீசும் குளுகுளு கோவையில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வரலாறு காணாத அளவு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ள இளநீர், தர்பூசணி, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, கரும்பு ஜூஸ், கூல், மோர் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி ஊட்டக்கூடிய பானங்களை பருகி வெப்பத்தை தனித்து வருகிறார்கள்.இந்த நிலையில், வெயிலுக்கு இளநீர் உகந்ததாக இருப்பதால் இளநீர் கடைகளில் விற்பனை சூடுபிடித்து உள்ளது.

இதன் காரணமாக கோவையில் இளநீர் விலை உயர்ந்து உள்ளது. அதன்படி கடந்த மாதம் ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்ட இளநீர் ஒன்று தற்போது (ஏப்ரல்.23) ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து இளநீர் வியாபாரிகள் கூறுகையில், கோவைக்கு பொதுவாக பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளநீர் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிக அளவு இருப்பதால் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிக அளவு இளநீரை பருகி வருகிறார்கள். இதன் காரணமாக இளநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் இளநீர் விலை உயர்ந்து இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் ஒரு இளநீரின் விலை ரூ.50-ஐ தொட்டு விடும் என்றனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...