தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பு அறையினை (strong room) மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள், கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.இங்கு 24 மணி நேரமும் துணை ராணுவ படையினர், போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெப் கேமரா உதவியுடன் வளாகம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பு அறையினை (strong room) மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்தி குமார் பாடி இன்று (ஏப்ரல்.24) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பு அறையினை (strong room) மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்தி குமார் பாடி இன்று (ஏப்ரல்.24) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.