கூடலூர், கவுண்டம்பாளையம் பேரூராட்சி தெக்குபாளையம் பகுதி பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு முகாமில் பாத்திர பண்டங்களுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, 22 குடும்பங்கள் இங்கு வசித்து வரும் ஓடை புறம்போக்கு 30 வருடங்களுக்கு முன்பு வகையறா மாற்றம் செய்யபட்டு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருவதாக கூறினர். மேலும் அருகாமையில் வசித்து வரும் நிரந்தர குடியிருப்பாளர்கள் தாங்கள் வசித்து வரும் இடத்தை ஆக்கரமித்து விளையாட்டு மைதானம் பூங்கா ஆகியவை அமைக்க முற்பட்டதை தொடர்ந்து பேரூராட்சி தலைவரிடம் முறையிட்டதை தொடர்ந்து வீட்டுமனை பட்டா வழங்க ஆட்சேபனை இல்லை என தீர்மானம் நிறைவேற்றபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனால், அங்கு குடிநீர் தெரு விளக்குகள் என வசதிகள் செய்து கொடுக்கபட்டதாக தெரிவித்தவர்கள் தற்போது அரசு அறிவிப்பின்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அப்புறபடுத்துவதின் பெயரில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் விவசாய நிலமாக இருந்த போது பயன்பாட்டில் இருந்த ஓடை தற்போது குடியிருப்பாக மாறியதை தொடர்ந்து வெள்ளம் வருவதற்கான வாய்ப்பு இல்லை என கூறி தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பாத்திர பண்டங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ஷீட்களை தரையில் விரித்துபடுத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.