கோவை, அன்னூர் கே.ஜி சர்வதேச பள்ளியில் கோவை மாவட்டத்தில் முதல்முறையாக குடும்ப கொண்டாட்ட விழா ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதியில் மாலை 3 மணி முதல் 9 மணி வரை கே.ஜி சர்வதேச பள்ளயில் கொண்டப்பட்டது. இவ்விழாவினை, பள்ளியின் தாளாளர் கே.ஜி ராமசாமி தொடங்கி வைத்தார். நிர்வாக இயக்குநர் சாந்தாமணி முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில், 4000த்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களும் 5000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் வயது வேறுபாடு இன்றி பெரியவர்களும் குழந்தைகளும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பின் பெற்றோர்களும் மாணவர்களும் பல்வேறு விதமான களிப்பூட்டும் நிகழ்சிகளும் பொழுதுபோக்கு நிகழ்சிகளிலும் கலந்து கொண்டனர். மாயாஜால நிகழ்ச்சியும் நடைபெற்றது. உணவு வகைகளும் அமைக்கப்பட்டிருந்தன.


பொதுமக்கள் இவ்விழாவினை அமைதியான முறையில் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். நிகழ்ச்சியில் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவானது இரவு 9 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.



இவ்விழாவில், 4000த்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களும் 5000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் வயது வேறுபாடு இன்றி பெரியவர்களும் குழந்தைகளும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பின் பெற்றோர்களும் மாணவர்களும் பல்வேறு விதமான களிப்பூட்டும் நிகழ்சிகளும் பொழுதுபோக்கு நிகழ்சிகளிலும் கலந்து கொண்டனர். மாயாஜால நிகழ்ச்சியும் நடைபெற்றது. உணவு வகைகளும் அமைக்கப்பட்டிருந்தன.


பொதுமக்கள் இவ்விழாவினை அமைதியான முறையில் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். நிகழ்ச்சியில் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவானது இரவு 9 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.

