கடும் வறட்சி காரணமாக கோழிகமுத்தி யானைகள் முகாமிலிருந்து வேறு இடங்களுக்கு யானைகள் இடமாற்றம்

கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் கடும் வறட்சி நிலவுவதால், அங்கிருந்த 20 வளர்ப்பு யானைகளை, மானாம்பள்ளி பகுதிக்கு ஐந்து யானைகள், வறகளியாறுக்கு ஐந்து யானைகள், சின்னார் பகுதிக்கு 10 யானைகள் என 20 யானைகளையும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.


கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள டாப்ஸ்லிப் பகுதியில் கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளில் சில யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கும்கியாக மாற்றி பல்வேறு பகுதிகளுக்கு வனப்பணிக்காக அழைத்துச் செல்லபடுகிறது.



தற்போது கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் கடும் வறட்சி ஏற்பட்டு யானைகளுக்கு போதுமான அளவு நீர் இருப்பு இல்லாததால் அங்கிருந்த 20 வளர்ப்பு யானைகளை நீர் உள்ள மானாம்பள்ளி பகுதிக்கு ஐந்து யானைகள், வறகளியாறுக்கு ஐந்து யானைகள், சின்னார் பகுதிக்கு 10 யானைகள் என ஆகிய மூன்று வனப்பகுதிகளுக்கும் யானைகளை அனுப்பி அங்கு பராமரித்து வருகின்றனர்.

இந்த யானைகள் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பராமரிக்கப்பட்டு மீண்டும் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...