2024-2025-ஆம் ஆண்டுக்கான சொத்துவரியை வரும் 30-ஆம் தேதிக்குள் முழுமையாகச் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்து வசூல் செய்யப்படும் என்று வால்பாறை நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை: வால்பாறையில் ஆண்டுதோறும் கடைசி நேரத்தில் பலா் சொத்துவரியை செலுத்தி வருகின்றனா். இந்நிலையில் வால்பாறையில், வரி செலுத்துவோரை ஊக்கப்படுத்தும் வகையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான சொத்துவரியை வரும் 30-ஆம் தேதிக்குள் முழுமையாகச் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்து வசூல் செய்யப்படும் என்று வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று ஏப்ரல்.25 தெரிவிக்கப்பட்டுள்ளது.