கட்டாந்தி மலை அடிவாரம் அருகே கனிம வளக்கொள்ளை - ஏழு லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

கனிம வளக்கொள்ளையில் ஈடுபட்ட லாரிகளை கட்டாந்தி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறைப்பிடித்து வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.


கோவை: கோவை மாவட்டம், வடக்கு தாலுகாக்கு உட்பட்ட கூடலூர் நகராட்சி மலை தளப் பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். இந்தப் பகுதியில் கட்டாந்தி மலை அடிவாரம், செல்வபுரம் வடக்கு பகுதியில் உள்ள வினோபா தான பூமியில் சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்கள் இன்று (ஏப்ரல்.26) அதிகாலையில் ஏழு டிப்பர் லாரிகள் மற்றும் இரண்டு ஜே.சி.பி எந்திரங்கள் மூலமாக சட்டத்துக்கு புறம்பாக கனிம வளங்களை தோண்டி எடுத்துக் கொண்டு செல்லப்பட்டது.

அதனை அங்கு உள்ள கட்டாந்தி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் அந்த லாரிகளை சிறை பிடித்து வருவாய்த்துறை, காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து காவல் துறையினர் அங்கு ரோந்து வாகனத்தை கொண்டு வந்து தடுத்து நிறுத்தி லாரிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.



மேலும் கடந்த தேர்தல் நாள் அன்று சட்ட விரோதமாக கனிம வளம் கொள்ளை அடிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி கனிம வள கொள்ளையை வருவாய்த் துறை மற்றும் கனிம வளத்துறை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. யானைகள் வழித்தட பாதையில் நடக்கும் கனிம வளக் கொள்ளை வனத்துறையினர் தடுத்து நிறுத்தவில்லை எனவும், அந்த கட்டாந்தி மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...