பொய் வழக்கு பதிவு செய்து வாலிபரை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் போராட்டம்

விசாரணைக்காக அழைத்து சென்ற வாலிபரை கடுமையாக தாக்கி, பொய் வழக்கு பதிவு செய்த கோவை சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர், ஆனந்த் இவரையும் அவரது அண்ணன் அரவிந் என்பவரை கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மார்ச் மாதம் ஜாமீனில் வந்த ஆனந்தை , கொலை முயற்சி வழக்கு தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினர் கடந்த வாரம் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை தாக்கியதில் கால் உடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆனந்தின் தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்நிலையில் தன் சகோதரரை தாக்கி பொய் வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆனந்தின் தங்கை மற்றும் அவர்களது உறவினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சரவணம்பட்டி காவல்துறையினர் வேண்டும் என்றே தன் சகோதரன் மீது பொய் வழக்கு தொடுத்து சித்தரவதை செய்துள்ளதாகவும், இது குறித்த கேட்ட தன்னையும் தனது தாயாரையும் சாதி பெயரை கூறி தாகாத வார்தையில் திட்டியதாகவும் குற்றம்சாட்டினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்தையில் ஈடுபட்டதை அடுத்து, சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து கலைந்து சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...