உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா - இரவை பகலாக்கிய வானவேடிக்கை நிகழ்ச்சி

மாகாளியம்மன் சிம்ம வாகனத்திலும், மாரியம்மன் சூலத்தேவருடன் குதிரை வாகனத்திலும் பரிவேட்டைக்கு எழுந்தருளினர். அப்போது நடைபெற்ற ஊர்வலத்தின் போது நிகழ்த்தப்பட்ட வானவேடிக்கை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் கடந்த 25ம் தேதி நடைபெற்றது.



இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு அம்மன் பரிவட்டைக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து குட்டை திடலில் வான வேடிக்கையும் நடைபெற்றது. முன்னதாக மாரியம்மன் சூலத்தேவர் மாகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து மாகாளியம்மன் சிம்ம வாகனத்திலும் மாரியம்மன் சூலத்தேவருடன் குதிரை வாகனத்திலும் பரிவேட்டைக்கு எழுந்தருளினார்கள். கோவில் வளாகத்தில் தொடங்கி உடுமலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் குட்டை திடலை அடைந்தது.



அதைத் தொடர்ந்து அம்மன் முன்பாக வான வேடிக்கை நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. அங்கு தயார் நிலையில் இருந்த வெடிகள் விதவிதமான வண்ணங்களில் வெவ்வேறான ஓசையுடன் வெடித்து சிதறியது.



இதை பொதுமக்கள் நேரிலும், வீடுகளின் மொட்டை மாடிகளில் நின்றும் ஆர்வத்தோடு கண்டு களித்தனர். மேலும் கண்கவர் பல ரகங்களில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள் இரவை பகல் ஆக்கியது. வான வேடிக்கை நிகழ்வையொட்டி உடுமலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...